|
Post by Admin on Jan 11, 2014 15:55:45 GMT 5.5
Welcome to your new ProBoards forum! If you need any assistance with your new forum, our staff is available to assist you seven days a week. Please visit our Support Forum at support.proboards.com. அன்பர்களே, தங்களுடைய முதல் பதிவாக இங்கு அறிமுகம் செய்து கொள்ளுங்கள். தாங்கள் சிவாஜி ரசிகராயிருப்பின் எப்போதிலிருந்து, எப்படி, போன்ற மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்க.
|
|
|
Post by ravihyd on Jan 12, 2014 17:56:47 GMT 5.5
|
|
|
Post by ravihyd on Jan 12, 2014 17:57:46 GMT 5.5
சார் பசிக்குது! - பரீட்சைக்கு படிக்கணும் !! ( இது ஒரு உண்மை சம்பவம் ) அன்று விடுமுறை - மெதுவாக எழுந்து மெதுவாக மற்ற காரியங்களை செய்யலாம் என்று நினைத்த சமயத்தில் என் மனைவி அருகில் இருப்பதை சற்றே மறந்து விட்டேன் - விடுமுறை ஒரு பாவம் என்பதை ஒரு சில நாடிகளுக்குள் என்னை உணர வைத்து விட்டாள். சற்றே வெளியில் தூறல் - கடைக்கு போயே ஆகவேண்டும் - இல்லை என்றால் மதிய உணவு வீட்டில் கிடைக்காது. ஒரு சிறுமியின் குரல் - என்னை சற்றே கட்டி போட்டு விட்டது - உடம்பை மறைக்க போதிய உடை இல்லை - பசியை மறக்க போதிய உணவு இல்லை - கண்கள் உறக்கத்தை பார்த்து அவளுடைய வயதை விட அதிக நாட்கள் ஆகி இருக்கும் – “சார் கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா ??- பசிக்குது சார் !- என் கால்கள் நடையை சற்றே வேகபடுத்தின - பிச்சை எடுக்க ஒரு குழந்தையைத்தான் அனுப்பவேண்டுமா ? நான் சாப்பாடு போட்டாலும் அந்த சிறுமி அடுத்த நாள் பிச்சை தானே எடுக்க வருவாள் ? "சார் , நாளை எனக்கு பள்ளியில் பரீட்சை , இப்போது கொஞ்சம் சாப்பிட்டால் , தெம்பாக படிக்க முடியும்" --- ஆண்டவனே - இந்த சிறுமியை பிச்சைகாரி என்று நினைத்து விட்டேனே - என்ன பைத்தியகாரத்தனம் -- படிக்க தானே உணவு கேட்கிறாள் ?? - அவளை ஓடிபோய் அணைத்துக்கொண்டேன் - உன் பேரு என்னமா ? அந்த சிறுமி வினோதினி என்றால் - விநோதனமான பெயர் - அடுத்த கேள்வி - அப்பா அம்மா யாரு ? எங்கே இருகிறார்கள் ? - தெரியாது சார் - எனக்கு ஒரு மாமா இருக்கிறார் ஆனால் அவருக்கு என்னை விட தண்ணீரில் இருப்பது தான் மிகவும் பிடிக்கும். இந்த சின்ன வயதில் என்ன தத்துவம் !! - அருகில் இருந்த உடுப்பி ஹோட்டல் லில் அவள் பசியை போக்கினேன் !! - இந்த நட்பு தொடர்ந்தது - அவள் தன் மாமாவிடம் இருக்கவே பயந்தாள் - என் மனைவியிடம் சொல்லி அவளை என் விட்டிலேயே வைத்துகொண்டோம் - படிப்பில் முதலாக வருவதை அவள் ஒரு பழக்கமாக்கி கொண்டாள் - அவள் வந்தவுடன் வீடே ஒரு புதிய சிறப்பை கொண்டதாகி விட்டது – இன்று அந்த வினோதினி ஒரு CA வாக எங்கள் நடுவில் உற்சாக நடை போட்டு கொண்டு இருக்கிறாள் - அவளுக்கு நல்ல பையனாக பார்த்து கொண்டுருகின்றோம் - எவளவோ அனாதைகள் இந்த உலகில் - எல்லோரையும் நாம் தத்து எடுத்து கொள்ள முடியாது - ஆனால் அவர்களில் சிலரை வாழ்கையில் முன்னுக்கு கொண்டு வர முடியும் - இந்த விநோதினியை போல - அதற்க்கு கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் - கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திகொள்ளும் மன பக்கவமும் நமக்கு இருந்தால் , எவள்ளவு பேர்களுக்கு நாம் உபயோகமாக இருப்போம் !! இதுதான் நான் கற்று கொண்ட அனுபவம். இந்த பெருமை என்னை விட என் மனைவிக்குதான் - தன் மகளை விட அதிக அன்பை ஊட்டினாள் - வினோதினி எங்களை விட்டு இன்னும் சில நாட்களில் திருமணம் செய்து கொண்டு பிரிந்து விடுவாள் - ஆனால் எங்களை விட்டு பிரியாமல் இருப்பது அந்த குரல் – “சார் பசிக்குது - நாளை பரீட்சைக்கு படிக்கணும் -- வீட்டில் மாட்டி இருந்த NT யின் போட்டோவை பார்த்தேன் - உங்களின் பாசம் , மற்றவர்களிடம் நடந்துகொண்ட முறை , மற்றவர்களுக்கு உதவும் நல்ல குணம் , இவைகளை பார்த்து கற்று கொண்ட பிறகு தானே தானே எனக்கும் ஒருவருக்கு வாழ்க்கையில் உதவ வேண்டும் என்று தோன்றியது - அவரும் மெரினா சிலையாக ஒரு மௌனம் சாதித்தார் , புண் முறுவல் மறையாமல் ---- அன்புடன் ரவி பின் குறிப்பு : உண்மை பெயர்கள் மாற்றி கொடுக்கபட்டுள்ளன
|
|
|
Post by vasu on Jan 12, 2014 21:36:15 GMT 5.5
ரவி சார்,
வினோதினியைத் தத்தெடுத்த தங்க உள்ளத்திற்கு ஈடு இணையேது?
ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம். வினோதினியும், அவர் குடும்பமும் நீடு வாழ வாழ்த்துக்கள். உலகைக் காக்கும் இறைவனும், நடிப்பின் இறைவனும் தங்கள் குடும்பத்திற்கு அருள் புரிவார்கள். அநாதையாகாமல் ஒரு சிறுமி பாதுகாக்கப் பட்டு அவள் வாழ்வும் சீராக்கப் பட்டு இன்று திருமணக் கோலம் பூணப் போகிறாள். அவள் வாழ்வாங்கு வாழ நடிகர் திலகத்தின் ஆசிகளோடு உளமார வாழ்த்துகிறேன்.
|
|