|
Post by Admin on Jan 12, 2014 12:05:17 GMT 5.5
நடிகர் திலகத்தைப் பற்றிய பத்திரிகை செய்திகள், துணுக்குகள், தகவல்கள் போன்றவை இங்கு இடம் பெறும்.
|
|
|
Post by Admin on Jan 14, 2014 20:18:10 GMT 5.5
நன்றி என்பதின் பொருள் என்ன வென்று உணர்ந்து கொள்ள நடிகர் திலகத்தின் குடும்பத்தை விட சிறந்த உதாரணம் ஏது. இன்று வரை பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு மரியாதை செய்து வரும் சிறந்த மனிதரின் வாரிசுகளை எப்படிப் பாராட்டுவது. 19.01.2014 தேதியிட்டு வெளிவந்துள்ள இவ்வார ராணி இதழிலிருந்து..
|
|
|
Post by Admin on Jan 16, 2014 7:28:59 GMT 5.5
Dinamani Vellore 16.01.2014By dn, வேலூர் First Published : 16 January 2014 01:50 AM IST நடிகர் சிவாஜி கணேசனை "பராசக்தி' திரைப்படம் மூலம் அறிமுகம் செய்த வேலூர் நேஷனல் திரையரங்கு உரிமையாளர் பெருமாள் முதலியார் வீட்டுக்கு நடிகர் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினர் பொங்கலையொட்டி செவ்வாய்க்கிழமை வருகை தந்து சீர்வரிசை பொருள்கள் அளித்து ஆசி பெற்றுச் சென்றனர். தனது நேஷனல் பிக்சர்ஸ் பட நிறுவனம் மூலம் சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் பெருமாள் முதலியார். அவரது வீட்டுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் சிவாஜி கணேசன், அவரது மனைவி கமலா மற்றும் குழந்தைகளுடன் வந்து சீர்வரிசை அளித்து ஆசி பெற்றுச் செல்வது வழக்கம். சிவாஜி கணேசன் மறைவை அடுத்து அவரது மகன்கள் ராம்குமார், பிரபு ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வேலூருக்கு பொங்கல் அன்று வந்து சீர்வரிசை அளித்து ஆசி பெற்றுச் செல்கின்றனர். இந்த ஆண்டு பொங்கலையொட்டி, நடிகர் பிரபு, அவரது மனைவி புனிதா, நடிகர் விக்ரம் பிரபு ஆகியோர் காட்பாடி காந்தி நகர் கிழக்குப் பகுதியில் உள்ள பெருமாள் முதலியார் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்தனர். அவர்களை பெருமாள் முதலியார் மனைவி மீனாட்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். பிரபு குடும்பத்தினர் அளித்த சீர்வரிசையைப் பெற்றுக் கொண்ட மீனாட்சியம்மாள் அவர்களுக்கு பொங்கல் பரிசு அளித்து ஆசி அளித்தார்.
|
|
|
Post by Admin on Jan 18, 2014 21:36:40 GMT 5.5
பெருமாள் முதலியார் அவர்களின் மனைவி திருமதி மீனாட்சி அவர்களிடம் பிரபு, திருமதி பிரபு, விக்ரம் பிரபு சீர் தரும் காட்சி. நிழற்படம் நன்றி மாலைமலர் இணைய தளம்
|
|